நாரஹேன்பிடவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து நேற்றுமுன்தினம் கைகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர்தான் என்பது நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் எதற்காக கை குண்டை வைத்தார் என்பதற்கான காரணமும் வௌியாகியுள்ளது.
குறித்த நபர் பணக் கஸ்டத்தில் இருந்துள்ளதாகவும் அதனை தீர்ப்பதற்காக கைக்குண்டை அங்கு வைத்துவிட்டு சந்தேகநபர் தானாகவே அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.