Date:

திருகோணமலையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் !

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில்  உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தாக்குதல் இடம்பெற்ற வேளை வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...