Date:

‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ! 1101 சந்தேக நபர்கள் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1101 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1030 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 1101 சந்தேக நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின்போது, 427 கிராம் 937 மில்லி கிராம் ஹெராயின், பனி 294 கிராம் 196 மில்லி கிராம், கஞ்சா 39 கிலோ 206 கிராம், மாவா 448 கிராம் 11 மில்லி கிராம், துலே 34 கிராம் 495 மில்லி கிராம், மதனா மோடகா 82 கிராம் 85 மி.கி, 884 மாத்திரைகள், 50  கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 1030 சந்தேக நபர்களில் 46 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 43 சந்தேக நபர்களும் இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...