Date:

வரிப்பணம் செலுத்தும் போது சேவைக்கட்டணம் செலுத்த தேவையில்லை – கொழும்பு மாநகர சபை

இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டுவந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ராேஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை  இடமளித்திருந்தது. அதன் பிரகாரம் அதிகமான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையினால் வழங்கப்படும்  பொது மக்கள் நிவாரண நிதி, கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் மாளிகாவத்தை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல்போனவர்கள், எதிவரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் கோரி இருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...