Date:

நாட்டில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காய் மற்றும் பழங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது.

சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மரக்கறி மற்றும் பழ வகைகளை குளிர்ந்த நீரில் கழுவுவதனை விடவும், குளிர்ந்த நீருடன் வினாகிரி அல்லது உப்பு சேர்த்து கழுவுவதன் மூலம் கிருமிநாசினிகளை நீக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

மேலும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளில் காணப்படும் தோலினை நீக்குவதன் மூலம் இலகுவில் அவற்றின் மேற்பரப்பில் காணப்படும் கிருமிநாசினிகள் அல்லது விச இரசாயனங்களை அகற்றிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

NewsTamil Ad

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...

முஸ்லிம் தாதியர் ஆடை விவகாரம்

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...