Date:

வைத்தியசாலையின் ஊழியர் மீது சுடு நீரை ஊற்றிய இராணுவ வீரர்

கராப்பிடிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இராணுவ வீரர் ஒருவருக்கும், வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஊழியரின் முகத்தில் இராணுவ வீரர் ஒருவர் கொதிக்கும் சுடு நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதேவேளை தீக்காயங்களுக்கு உள்ளான வைத்தியசாலையின் ஊழியர் கராப்பிடிய வைத்தியசாலையின் 58ஆவது இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார் என வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம அம்பெகம பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது அநுராதபுரம் சாலியவெவ
முகாமில் பணியாற்றி வரும் இராணுவ வீரர் தனது 8 வயது மகனுக்கு சுகயீனம்
காரணமாக கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் தனது மகன் சுடு தண்ணீர்
கேட்டதால், அதனை பெற்றுக்கொள்ள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்
சாலைக்கு சென்றுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலையின் ஊழியரும் சிற்றுண்டிச் சாலைக்கு வந்து
தேனீரை கோரியுள்ளார். தேனீரும், சுடு தண்ணீரும் ஒரே கவுண்டரில்
வழங்கப்படுவதால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இராணுவ வீரருக்கும்,
ஊழியருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் உச்சக்கட்டத்தை அடைந்ததால் ஆத்திரமடைந்த இராணுவ வீரர்
ஊழியரின் முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...