Date:

மர்மமான முறையில் இருவர் மரணம் !

நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்,

அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிகரிக்கும் பதற்றம் : காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய...

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...