Date:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

இன்றைய தினம் நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு  மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும்  அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

களுத்துறை  தொடக்கம் காலி  ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மேலும், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து  காற்று வீசும்.  கொழும்பு  தொடக்கம் புத்தளம்  ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன்  மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால்...

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...