Date:

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகளால் விருந்தகங்கள் எதிர்நோக்கும் சிக்கல் !

இலங்கையில் உள்ள நட்சத்திர விருந்தகங்களில் பணியாளர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் விருந்தக நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை தொடக்கம் சமையல் அறை வரை அனைத்து திணைக்களங்களிலும் பணியாளர் வெற்றிடங்கள் உள்ளன.

தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனவும் சம்பந்தப்பட்ட விருந்தக நிர்வாகங்கள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு அறிவித்துள்ளன.

நட்சத்திர விருந்தக பணியாளர் தரத்திற்கு பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விருந்தகங்களில் தொழில்வாய்ப்பை பெற்று வெளியேறியதாலும், விருந்தக பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் தொழில் தேடுவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வாக, விருந்தக சேவையில் பயிற்சி பெற்ற இளைஞர்களை விரைவில் நட்சத்திர விருந்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...