மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா.
ஹட்டன் டன்பார்வீதி, டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முகத்துவாரம் மிஷ்பா ஜெப மிஷனரி ஊழியத்தில் நடைபெற்றது. இது குறித்து மிஷ்பா மிஷனரி ஆலயத்தின் தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணி கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
கண்ணீரோடும், கவலையோடும் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து தேவனுடைய விடுதலையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதோடு சகல அனுமதிகளையும் பெற்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.