Date:

ராஃபாவில் தரைவழிப் போருக்கு தெளிவாகத் திட்டமிடும் இஸ்ரேல் !

ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல்
தெளிவாக திட்டமிட்டு வருகிறது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவின் ராஃபா தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட
உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துவரம் நிலையிலும் இதில் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல்
தெரிவித்துள்ளது.

ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸூக்கு எதிரான
போரில் தோற்பதற்கு சமமானது.

எவ்விதஅழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். முழு வெற்றி கிட்டும்வரை இஸ்ரேல் சண்டையிடும்.

அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செயற்பட்டு வருகிறது. அமெ
ரிக்காவின் ஆதரவுக்கு நன்றியையும் தெரிவிக்கின்றோம்.

இஸ்ரேல் பிணைக் கைதிகள் 134 பேர் ராஃபாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில்
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் அங்கு தஞ்சமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், ராஃபாவில் உள்ள பொது மக்கள் அங்கிருந்து
பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தொடங்கும்.- என்று தெரிவித்துள்ளார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...