Date:

தடுப்பூசி பெற்றுக்கொள்ள கொழும்பு இளைஞர்கள் விரும்புவதில்லை

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் வைரஸிற்கு எதிராக சைனோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள, இளைஞர் யுவதிகள் விரும்புவதில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அவர்கள் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருக்கின்றனர். இதன் காரணமாக நகர எல்லைக்குள் இளைஞர், யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

நகர எல்லையில் 97000 இளைஞர்கள் உள்ள போதிலும் இதுவரையில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களுக்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்தியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

கொவிட் தடுப்பு நடவடிக்கைக்காக பைஸர் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதென அடிப்படையற்ற கருத்துக்களை அவர்களாகவே உருவாக்கியுள்ளமை இதற்கு காரணமாகும். எனினும் அந்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது,...