Date:

இலங்கையில் உருவாக்கப்பட்ட ராட்சத பீட்சா..! சுவைக்க படையெடுக்கும் மக்கள்..!

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் உலக பீட்சா தினத்தை முன்னிட்டு ஹோட்டல் வளாகத்தில் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார்.

பீட்சாவை உருவாக்க தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 04 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் பெப்பர்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை வெங்காயம் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்பட்டது.

50 அங்குல நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவை 08 நிமிடங்களில் பேக் செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஹோட்டல் வளாகத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பீட்சாவை சுவைக்க வருகை தந்துள்ளனர்.

08 பேர் ஒரே நேரத்தில் ரசிக்கும் வகையில் 25 அங்குல பீட்சா துண்டுகள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம்...

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...