Date:

எரிமலை வெடிப்பு – ஐஸ்லாந்தில் அவசரகால நிலை !

எரிமலை வெடிப்பு காரணமாக, ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் சுடுநீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர், ஐஸ்லாந்தில் மூன்றாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், சுடுநீர் கிடைக்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலை நீடிக்குமாயின் 30,000 இற்கும் அதிகமானவர்கள் சுடுநீர் இன்றி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உடனடியான மனிதாபிமான உதவிகள் ஐஸ்லாந்துக்கு தேவைப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...