Date:

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு !

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதுடன், பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமூக வலைதளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப் பாடபட பரீட்சை வினாத்தாள் கசிந்ததை அடுத்து வினாத்தாளை இரத்து செய்த பரீட்சைகள் திணைக்களம், மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த முதலாம் திகதி நடத்தியது.

எனவே, பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாக இருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...