Date:

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...