Date:

கச்சத்தீவு திருவிழாவிற்கு இம்முறை 3 ஆயிரம் இந்திய பக்தர்கள் !

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்தாா்.

 

இது குறித்து ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

 

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து பக்தா்கள் கலந்துகொள்ள வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த ஆண்டு 75 விசைப்படகுகளில் 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பயண கட்டமாக நபா் ஒன்றுக்கு 2 ஆயிரம் இந்திய ரூபா நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தா்களுக்கான விண்ணப்பபடிவம் 6 ஆம் திகதி வரை வழங்கப்படும். அதற்கு பின் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...