Date:

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் !

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் நிலத்தடி ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட 8 இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுடைய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் ஊடாக பயணிக்கும் ஏனைய நாடுகளின் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வந்தன.

இந்தநிலையில் அந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ச்சியாக கூட்டு முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பதற்ற நிலையை தணித்து, செங்கடலின் ஸ்த்திரத்தன்மையை பாதுகாப்பதே எமது நோக்கம் என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் திகதி பிரித்தானியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் அமெரிக்க தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், இது இரண்டாவது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...