Date:

அமெரிக்கவில் இரு வீடுகளில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் சிக்காகோ அருகேயுள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்காகோ அருகிலுள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் ஒருவர் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய குறித்த நபர், 23 வயதான ரோமியோ நான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிவப்பு நிற டொயோட்டா கெம்ரி காரில் தப்பியோடியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு வன்முறைச்சம்பவம் அதிகரித்து வருகிறது.

இவ்வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு காரணமாக 875 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி...

ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய எம்.பிக்கள்

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம்...

தீப்பற்றி எரியும் விமானம்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல்...