Date:

45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளுடன் சமூக அபிவிருத்தி அதிகாரி கைது

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் 45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளுவிடிகே, நாவின்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் காலி மாநகர சபை பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம்...

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் '2026 இருபதுக்கு 20...

உயர் தர பரீட்சை விடைத்தாள்கள் தொடர்பில் வெளிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்...

கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல்...