Date:

45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளுடன் சமூக அபிவிருத்தி அதிகாரி கைது

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் 45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளுவிடிகே, நாவின்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் காலி மாநகர சபை பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலர் பாடசாலைகளும் ஆரம்பம்!

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப்...

பிரதமர் கொழும்பு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில்!

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...

பலத்த மின்னல் தாக்கலாம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த...

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...