Date:

45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளுடன் சமூக அபிவிருத்தி அதிகாரி கைது

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் 45 கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளுவிடிகே, நாவின்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் காலி மாநகர சபை பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்! – கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச்...

ஜப்பானில் நிலநடுக்கம்..! | சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர்...

வானளவு உயரும் முட்டையின் விலை..!

நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட...

அனர்த்தங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை...