நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 663 பேரும், குற்றப் புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 12 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.