Date:

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த நாளை தலைமை உரை

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல்  அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜி-20 சர்வமத மாநாடு 2021 நாளை(12) போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரையாற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 2 people and people standing\
May be an image of 2 people, people standing, outdoors and text that says "FICIAL PREMIER PARTNI N"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை,...

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல...