Date:

இலங்கைப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை ! விரைவில் புதிய சட்டம் !

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் சட்டத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதே தடை செய்யப்பட்டிருந்தது.

மேலும் , வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் செல்லும் பெண்ணிகளின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுகின்றனர்.

இதன்படி 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பெற்றோர் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அவர்களின் அசௌகரியத்தின் நிமித்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக காணொளிகள் மூலம் விசாரணகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...