Date:

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் !

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க தொடுத்த வழக்க இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்குமாறும் உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக இடம்பெற்று வரும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,000-ஐ நெருங்கிவிட்டது.

போரில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்தது.

எனினும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது.

விசாரணைகளில் முடிவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...