Date:

புத்தருக்காக உயிர் தியாகம் செய்யுமாறு கோரும் பௌத்த போதகர் !

கௌதம புத்தருக்காக உயிரைத் தியாகம் செய்யுமாறு அடியார்களை கோரும் பௌத்த மத போதகர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பௌத்த மதத்தை திரிபுபடுத்தும் வகையிலான போதனைகளை இந்த நபர் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவலோகிகேஷ்வர என்ற பெயரால் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

புத்தருக்காக உடலை எரித்துக் கொள்ளுமாறு இவர் தனது அடியார்களுக்கு போதனை செய்வதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான மத போதகர்களினால் பலர் தவறான தூண்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் மீண்டும் ஒரு மத போதகர் அடியார்களை தவறான முடிவை மேற்கொள்ளுமாறு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளுமாறு தூண்டுதல் பாரிய குற்றச் செயலென காஷ்யப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் நாட்டுக்கு வருகை தர முன்னதாகவே குறித்த நபர் தொடர்பில் குற்ற விசாரணை பிரிவிற்கும், ஏனைய உரிய தரப்புகளுக்கும் தகவல்கள் வழங்கிய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கண்மூடித்தனமான அடியார்கள் இந்த நபர் தனது மகளை தகாத தீண்டலுக்கு உட்படுத்திய நபர் என காஷ்யப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் இந்த நபர் நாய்களை பராமரித்து கொண்டிருந்தவர் எனவும் நாட்டுக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் ஏனைய இலங்கையர்கள் பணம் திரட்டி நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு நபரின் பின்னாலேயே கண்மூடித்தனமான அடியார்கள் பின் தொடர்வதாகவும் பௌத்த பிக்குணிகளும் இவரை வணங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நபர் தேரவாத பௌத்தத்தை விமர்சனம் செய்து மஹாநாயக்க பௌத்த கொள்கைகளை போற்றும் வகையிலான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் பௌத்த துறவி அல்ல எனவும் மனநோயாளி எனவும் இவருக்கு மனநோய் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் காஷ்யப்ப தேரர் கோரியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...