Date:

பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான சமிந்த தாப்ரு எனப்படும் பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் பொப்மாலியும் அவரது மனைவியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்களும் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பொலிசார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் எதிர்வரும் 15ம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துவந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...