Date:

லொறி விபத்தில் 06 வயது சிறுவன் பலி !

தினியாவல நெலுவ பெலவத்த வீதியில் 09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது.

பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த லொறி ஒன்றின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வேலைத்தளம் ஒன்றுடன் இணைந்ததாக இருந்த வீடொன்றின் மீது மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த வீட்டின் வாசலில் கதிரையொன்றில் அமர்ந்திருந்த சிறுவன் மீது லொறி மோதியுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 06 வயதுடைய அதித்ய புன்சரா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...