Date:

இலங்கையில் சினோபார்ம் தொழிற்சாலை!

சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பானது கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இலங்கை மக்களுக்காக சினோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சினோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சினோபார்ம் நிறுவன தலைவர், சினோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்தார். மேலும் சினோபார்ம் தடுப்பூசியானது 100இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், 50இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லையெனவும் அதன் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரிபொருளினைப் பெறுவதற்கு மீண்டும் நீண்ட வரிசை (Pics)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம்...

வேகமாக பரவும் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் மர்மமான வைரஸ்

சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக...

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த...