Date:

ஐந்தாவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் ஐந்தாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது.

350 ஆசனங்களை கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றதில் 50 ஆசனங்கள் பெண் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (7) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 120 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் பாதி பேர் பெண்கள் எனவும் பங்களாதேஷ் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

நேற்று (7) நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ​​அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சிகள் 152 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, பங்களாதேஷில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் 76 வயதான ஷேக் ஹசீனா இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...