நீர் விநியோக பாதையின் பராமரிப்பு காரணமாக வெல்லம்பிட்டியில் இருந்து கொட்டிகாவத்தை வரையிலான வீதி மூடப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (06) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளது.