Date:

கரையோர ரயில் மார்க்க பயண அட்டவணையில் திருத்தம் !

கரையோர ரயில் மார்க்கத்தின் பயண அட்டவணை இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில் , இன்று முதல் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.25 க்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி ரயில் சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வார நாட்களில் இரவு 8.35 க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை முன்னெடுக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.55 க்கு பயணத்தை ஆரம்பிக்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...