Date:

இம்ரான் கானின் வேட்புமனு நிராகரிப்பு !

அடுத்த வருடம் பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

71 வயதுடைய முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்னர், அவர் அரசியல் மற்றும் சட்டரீதியான பல சிக்கல்களை எதிர்கொண்டார்.

2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது சட்டவிரோதமாக அரச பரிசுகளை விற்பனை செய்தமைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் நேற்று தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலில் இருந்து இம்ரான் கானின் பெயரை பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.

அரச ரகசியங்கள் கசிவு தொடர்பான வழக்கில் இம்ரான்கானுக்கு பாகிஸ்தானின் நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது.

எவ்வாறாயினும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கத்தை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...