மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் கம்பனியின் தலைமை நிர்வாக அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (09) முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை முகாமைத்துவம் செய்த தனியார் கம்பனியின் குறித்த தலைமை நிர்வாக அதிகாரி நேற்றைய தினம் (08) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.