Date:

கொழும்பில் இருவர் சுட்டுக்கொலை!

கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் 2 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கவில் உள்ள ஏல காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற ஜீப்பில் ஒருவரின் சடலம் காணப்பட்டதுடன், மற்றைய சடலம் அருகில் காணப்பட்டது.

ஜீப்பிற்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழு உறுப்பினர் காரியவசம் அத்துகோரல ரொஷான் இந்திக்க என்றழைக்கப்படும் மன்னா ரொஷானின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

12 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி...

லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்...

சிலாபம் பஸ் விபத்தில் 21 பேர் படுகாயம்

சிலாபம், தெதுரு ஓயா அருகே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...

கனவுகளின் திறப்பு விழா: பொதுமக்களின் கவனத்துக்கு

ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெற உள்ள பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான...