Date:

சுனாமி பேரலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 26ஆம் திகதி சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெளிவுப்படுத்தியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையோ திகதியையோ யாராலும் கணிக்க முடியாது என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி பௌர்ணமி நாள் அன்றே ஏற்பட்டதாகவும், இதுவோ மக்கள் அச்சம் கொள்வதற்கான காரணம் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் 26ஆம் திகதி ஓரளவு மழை பெய்யக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...