Date:

யானையுடன் மோதி விபத்திற்குள்ளான பஸ் !

தனியார் பயணிகள் பஸ் ஒன்று யானையுடன் மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.

இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விதை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இருந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதற்காக வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோது இந்த பஸ் மோதியது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த சாரதி, நடத்துனர் உள்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில், “விமான அனுபவத்தை பூமியில் அனுபவிக்க வாருங்கள்” என்ற வாக்கியமும் எழுதப்பட்டிருந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காணொளி வைரல்: ஆணுறுப்பைக் காண்பித்தவர் கைது

அம்பாறை திருக்கோவிலில் சுற்றுலாப்பயணியொருவரிடம் ஆணுறுப்பை காண்பித்த நபரொருவரின் காணொளி வைரலானதையடுத்து, சம்பவத்துடன்...

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன்...

முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫     "புர்கினா பாசோ...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...