Date:

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர்...