Date:

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி பிரயோகம் : 14 பேர் பலி !

செக் குடியரசின் ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உரியிழந்துள்துடன்
25 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கியுடன் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்குள் பிரவேசித்த சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அவர் இந்த தாக்குதலை நடத்தியமைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேகநபர் மீது பதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவீன செக் குடியரசின் வரலாற்றில் இது மோசமான சம்பவமாக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...