நாட்டின் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை 97 இலட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சைனோபாம், அஸ்ட்ராசெனகா, பைசர், ஸ்புட்னிக் வி, மொடர்னா, ஆகிய தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசி இரண்டு தடவைகள் செலுத்தப்பட்டுள்ளன.