கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.