Date:

பேருந்து கட்டணத்தில் திருத்தம்

வெட் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனவரி மாதத்தில் இருந்து பேருந்து இறக்குமதிக்கு சாதாரணமாக ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சம் ரூபாய் செலவாகும்.

18% வாட் வரி அதிகரிப்பால் மேலும் 20 லட்சம் அதன் விலை உயரும்.

அந்தத் தொகைக்கு பேருந்தினை கொண்டுவந்து பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள பஸ் உரிமையாளர்களுக்கு முடியாது.

அத்துடன் உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, பரமாரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. மிகப் பாரதூரமான விடயம் எரிபொருள் விலை உயர்வு ஆகும் எரிபொருளுக்கும் வெட் வரி விதிக்கப்பட்டவுள்ளது.

அப்போது டீசல் விலை கண்டிப்பாக அதிகரிக்கும். பொது மக்களுக்கே இது சிக்கலை கொடுக்கும். இவை அனைத்தும் அதிகரித்தால் மீண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் போக்கு உள்ளது.

இதுபற்றி ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்” என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...