கொவிட் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளுக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 2,067 கைதிகளுக்கும், பெண்கள் பிரிவிலுள்ள 369 சிறைக் கைதிகளுக்கும் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையிலுள்ள 694 கைதிகளுக்கும் இன்று தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.