Date:

இலங்கை கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது – நாமல்

இலங்கைக் கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் கவனம் செலுத்தப்படும் என்பதால், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது  என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவிற்கு  பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த  அமைச்சர் நாமல் ராஜபக்ச  மேலும் கூறுகையில்,

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கோப் குழுவும் கடந்தக் காலங்களில் அவதானம் செலுத்தியிருந்தது. இது  தொடர்பில் கோப் குழுவிடமிருந்து கிடைக்கப்பெறும் புதிய அறிக்கைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்

இலங்கைக் கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் கவனம் செலுத்தப்படும் என்பதால், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் நானோ, எங்களது அரசாங்கமோ பாதுகாக்கப்போவதில்லை. அவர்களுக்கு எதிராக சட்டநடிவக்கை எடுக்கப்படும்  என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட...

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...