நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் கிடைத்திருந்தன.
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.