Date:

68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வடக்கு கடற்பரப்பில் 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 227 கிலோவிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...