Date:

68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

வடக்கு கடற்பரப்பில் 68 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 227 கிலோவிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த...

பாலர் பாடசாலைகளும் ஆரம்பம்!

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப்...

பிரதமர் கொழும்பு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில்!

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...

பலத்த மின்னல் தாக்கலாம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த...