மருத்துவ ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.