Date:

ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

 மருத்துவ ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...