Date:

சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் அனைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய, பொருத்தமான காணிகள் தெரிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் இரண்டாயிரத்து 522 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி மயானத்தில் மேலும் 300 சடலங்களை புதைப்பதற்கான காணி மாத்திரமே காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை...

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று...

சுனாமி நினைவு தினம் இன்று

இலங்கையின் பாரிய அழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரழிவின் 21ஆம் ஆண்டு நினைவு...

சுற்றுலாப் பயணிகளின் வருகை 22.5 லட்சத்தைத் தாண்டியது

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின்...