யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்துகொண்டுள்ளளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்கு குறித்த நபர்கள் பங்கேற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த இறுதி சடங்கை குறித்த நபருடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இறுதி சடங்கிற்கு சிறுவர்களும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.